பதிவு செய்த நாள்
10
மே
2022
11:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜோதிநகர் அமைதிநகரில் மதுரைவீரன் சுவாமி, பொம்மியம்மன், வெள்ளையம்மன், பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா கடந்த, 8ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி நேற்று பக்தர்கள், தீர்த்த குடம் எடுத்தனர். சேத்துமடை காளியம்மன் கோவிலில் கும்பம் தாளித்து, அம்மன் குளத்தில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.பொள்ளாச்சி பத்ரகாளியம்மன்கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மதுரைவீரன் கோவிலுக்கு வந்தடைந்தனர். சுவாமிகளுக்கு பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.இன்று உருவாரம் கொண்டு வருதல், கும்பம் தாளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (11ம் தேதி) காலை, 6:00 - 7:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.வரும், 12ம் தேதி அமுது பொங்கல் தீபாராதனை, 13ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 14ம் தேதி அபிேஷக, ஆராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் இளைஞரணி, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.