பதிவு செய்த நாள்
10
மே
2022
05:05
சூலூர்: சூலூர் அத்தனூர் அம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனூர் அம்மன் கோவில், 1,400 ஆண்டுகள் பழமையானது. இங்கு, 29 ம் ஆண்டு வைகாசி திருக்கல்யாண திருவிழா, கடந்த மே 3 ம்தேதி, சாமி சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்து வருகிறது. நேற்று அக்னி கம்பம் நடும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கம்பம் சுற்றி ஆடி வழிபட்டனர். மே 17 ந்தேதி பண்டார வேஷமும், அம்மை அழைத்தலும் நடக்கிறது. மே 18 ந்தேதி காலை, 9:00 மணிக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து அம்மை அழைத்தலும், தீர்த்தம் மற்றும் பால் குட ஊர்வலம் நடக்கிறது. மாலை மாவிளக்கு மற்றும் திருக்கல்யாண அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மே 21 ம்தேதி ஊர் அபிஷேகமும், மே 24 ம்தேதி மகா முனி மற்றும் சங்கிலி கருப்பராயனுக்கு படையல் பூஜை நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.