Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டின பிரவேசத்தில் எதற்கு வீண் ... அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவில்களில் விரைவில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு
எழுத்தின் அளவு:
பழமையான கோவில்களில் விரைவில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு

பதிவு செய்த நாள்

15 மே
2022
02:05

பொன்னேரி : பழமையான கோவில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என, போது, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.எம்.எல்.ஏ.,க்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, மேலுாரில் உள்ள திருவுடையம்மன், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள், சமஈஸ்வரர் கோவில், திருப்பாலைவனம் திருபாலீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அர்ச்சகர்கள், மக்களிடம் கேட்டறிந்தார்.ஆய்விற்கு பின் தெரிவித்ததாவது:தமிழகத்தில், ஒராண்டில், 2,666 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிதியாண்டில், 1,500 கோவில்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மீஞ்சூர், திருவுடையம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைப்பது குறித்தும், கோவிலுக்கு வரும் சாலைகளை சீரமைப்பது குறித்தும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பழவேற்காடு ஆதிநாராயண சுவாமி கோவிலில், 14 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அந்த கோவிலில், திருப்பணி மேற்கொள்ள உள்ளோம். கோவிலின் பழமை மாறாமல் முழுமையாக புனரமைத்து தரப்படும்.பழவேற்காடு சமஈஸ்வரர் கோவிலும், 1,000 ஆண்டுகள் பழமையானது. அந்த கோவிலினையும் புனரமைத்து, கோவிலுக்கு வரும் அணுகு சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில், 2007ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு, 8 கோடி ரூபாயில், தங்க ரதம் செய்ய அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே கோவிலில், 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar