Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சோலையம்மாள் கோவிலில் அஷ்டபந்தன ... ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

25 மே
2022
10:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான இன்று இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடந்து, 10 நாட்கள் நடந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு வீதிகள் வழியாக வீதியுலா சென்று வந்தார். இதில், பிரபல உற்சவமான கருடசேவை உற்சவம் கடந்த 15ம் தேதியும், தேரோட்டம், 19 ம் தேதியும் நடந்தது. இரு உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த, 22ல் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் கொடி இறக்கப்பட்டு, வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. அதைதொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் விடையாற்றி உற்சவம் கடந்த 23ல் துவங்கியது. கடந்த இரு நாட்களாக விடையாற்றி உற்சவத்தையொட்டி பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. இதில் காலை, 11:00 மணிக்கு, நுாறுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடந்தன.

விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான இன்று மாலை 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், சன்னதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னதி வந்தடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar