Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12ம் நூற்றாண்டு வாள் வீரன் நடுகல்; ... வளையல் அலங்காரத்தில் பகவதி அம்மன் : மாவிளக்குடன் சிறப்பு பூஜை வளையல் அலங்காரத்தில் பகவதி அம்மன் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் மூன்று நாள் தேரோட்டம் துவங்கியது
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் மூன்று நாள் தேரோட்டம் துவங்கியது

பதிவு செய்த நாள்

27 மே
2022
09:05

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது.

பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 9ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பூச்சாட்டு விழா, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் மாவிளக்கு, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 5:05 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டத்தையொட்டி, 36 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், 15 அடி உயரம் உள்ள தேரில், விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
பக்தர்கள் வடம் பிடிக்க, தேரில் அம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் வாழைப்பழம் சூறை விட்டு வழிபட்டனர். தேருக்கு பின்னால் வந்த பக்தர்கள், மரக்கட்டையால் தேர் சக்கரத்துக்க முட்டுக்கொடுத்து தள்ளினர். தேரோட்டத்தில், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார், தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று மாலை இரண்டாம் நாள் தேரோட்டமும், நாளை மாலை மூன்றாம் நாள் தேரோட்டமும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு  ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar