Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோவிலில் பூணூல் விழா வேடசந்தூரில் பவுர்ணமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சூர் பகுதியில் மழை வேண்டி சிறப்பு பூஜை விநாயகருக்கு கிராம மக்கள் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
12:08

மஞ்சூர் : மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் மழை வேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கீழ்குந்தா, எடக்காடு, முக்கிமலை, கன்னேரிமந்தனை உட்பட பல்வேறு இடங்களில் தென் மேற்கு பருவ  மழை பொய்த்ததால் விவசாய பயிர்கள், தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள்  வேதனையடைந்துள்ளனர். மேலும்  கிராம பகுதிகளுக்கு நீராதாரமாக உள்ள நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் உற்பத்திக்கு பயன்படும் அப்பர்பவானி,
அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட அணைகளில் தண்ணீர் குறைந்ததால் மின் உற்பத்தியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், மஞ்சூர் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் நீராதாரங்களிலும், கோவில்களிலும் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தி  வருகின்றனர். எடக்காடு கிராமத்தில் ஊர் தலைவர்கள் பெள்ளிகவுடர், தர்ஜிகவுடர் தலைமையில் அங்குள்ள விநாயகர்  கோவிலில் பூஜை செய்தனர். கன்னேரி மந்தனை கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் நீராதார பகுதியில் பூஜை  செய்தனர். பூஜையில் ஏராளமான பெண்கள் தண்ணீர் குடங்களுடன் ஊர்வலமாக சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்து  வழிப்பட்டனர். பாதக்கண்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் தண்ணீர் குடங்களுடன் ஊர்வலமாக சென்று  மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மழை வேண்டி நடந்த சிறப்பு பூஜையையொட்டி கிராமங்களில்  தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் விழாவை முன்னிட்டு, குண்டம் கண் திறக்கும் பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar