Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... அண்ணமார் கோயில் கும்பாபிஷேகம் அண்ணமார் கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணலூரில் பாண்டிய மன்னர்கள் வழிபட்ட சிவாலயம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மணலூரில் பாண்டிய மன்னர்கள் வழிபட்ட சிவாலயம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
11:06

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மணலூரில் பூமிக்குள் புதையுண்டு கிடக்கும் பாண்டிய மன்னர்கள் வழிபட்ட சிவன் கோயிலை வெளிக்கொண்டு வர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மணலூர் கண்மாய் கரை அருகே ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய நந்தி சிலையின் மேற்புற பகுதியை காரைக்குடி அழகப்பா பல்கலை துணை பதிவாளர் (ஓய்வு) காளைராசன் குழுவினர் கண்டறிந்தனர். இங்கு 2 அடி அகலம், 4 அடி உயரம், 6 அடி நீளத்தில் நந்தி சிலை இருப்பதை அறிந்தனர்.

முதல் அகழாய்வுடன் முடக்கம்: இது குறித்து காளைராசன் கூறியதாவது, மதுரையை கண்ணகி எரித்த பின் பாண்டிய மன்னர்கள் நாட்டு மக்களுடன் மேற்கு நோக்கி நகர்ந்து தற்போதைய மதுரை நகரை உருவாக்கியுள்ளனர். அவர்கள் வழிபட்ட சிவன்கோயில் நந்தி என தெரியவந்துள்ளது. இதற்கு ஆதாரமாக நந்தி சிலையை சுற்றிலும் 40 அடி நீள அகலத்தில் கருங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் உள்ளது. முன்பிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இச்சிவன் கோயிலை மையப்படுத்தி குடியிருப்புகள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி 500 மீட்டர் துாரத்திற்கு முதற்கட்ட அகழாய்வு மேற்கொண்டார். நந்தி சிலை பகுதியில் தான் முதலாம் கட்ட அகழாய்வு நடத்தினர். அம்மன் கோயில், அய்யனார் கோயில் ஆகியவை ஒரே நேர்கோட்டில் உள்ளது. எனவே தொல்லியல் துறையினர் இங்கு தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றார். தமிழக தொல்லியல் துறை ஆறு மற்றும் ஏழாம் கட்ட அகழாய்வில் கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலூர் ஆகியவற்றை சேர்த்து நடத்தியது. 8ம் கட்ட அகழாய்வில மணலூர் குறிப்பிட்டிருந்தாலும் இதுவரை அகழாய்வு நடத்தவில்லை. எனவே தொல்லியல் துறை மணலூர் கண்மாய் பகுதியில் அகழாய்வை மேற்கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,15ல் ... மேலும்
 
temple news
வில்லியனுார்:: வில்லியனுார் கோகிலாம்பிகை சுவாமிக்கு ரூ.௬ லட்சம் மதிப்பிலா தங்க தாலி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி, திலாஸ்பேட்டை தீமிதி திடலில் திருவாசகம் முற்றோதல் நிகழ் ச்சி நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar