Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் வாராஹி அம்மன் கோயிலில் ... மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி உற்ஸவம் துவங்கியது மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2022
10:07

சென்னை : கும்பகோணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற லட்சுமி மற்றும் சரஸ்வதி பஞ்சலோக சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்; இருவரை கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், மர்ம நபர்கள் இருவர், பழமையான பஞ்சலோக சுவாமி சிலைகளை விற்கவும், வெளிநாடுகளுக்கு கடத்தவும் முயற்சி செய்து வருகின்றனர் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு, இரு தினங்களுக்கு முன் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், 22; கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார், 40, ஆகியோர் வெளிநாடுகளுக்கு சிலை கடத்த முயற்சி செய்து வருவதை கண்டுபிடித்தனர். பின், சிலை வியாபாரிகள் போல போலீசார் நடித்து, இருவரையும் சந்தித்தனர். ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோர், இரண்டு சிலைகளையும் 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் வேண்டுமானால், சிலையை பார்த்துவிட்டு, விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனக்கூறியுள்ளனர்.இதற்கு போலீசாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோர் சிலைகளுடன், நேற்று முன்தினம் இரவு, கும்பகோணம் அருகே சுவாமிமலை என்ற இடத்திற்கு எடுத்து வந்தனர். அப்போது, இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்; சிலைகளையும் மீட்டனர். ஆய்வு செய்ததில், பழமையான பஞ்சலோக சிலைகள் என்பது உறுதியாகி உள்ளது.ரஞ்சித் மற்றும் உதயகுமார் ஆகியோரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டன என, எங்களுக்கு தெரியும். ஆனால், நாங்கள் சிலைகளை திருடவில்லை. இதன் பின்னணியில் வேறு சிலர் உள்ளனர். சிலைகளை உள்ளூரிலோ அல்லது வெளிநாடுகளிலோ விற்று பணம் கொடுத்தால், கமிஷன் தொகை தருவதாக கூறினர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தோம் என, கடத்தல் பேர்வழிகள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதையடுத்து, சிலைகள் திருடப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar