Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தர விநாயகர் கோயிலில் ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் யாத்ரீகர்கள் 25 பேர் தமிழகம் திரும்பினர்
எழுத்தின் அளவு:
அமர்நாத் யாத்ரீகர்கள் 25 பேர் தமிழகம் திரும்பினர்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2022
11:07

சென்னை : அமர்நாத் யாத்திரை சென்ற போது நிலச்சரிவில் இருந்து தப்பிய, தமிழகத்தைச் சேர்ந்த, 25 யாத்ரீகர்கள், பாதுகாப்பாக தமிழகம் வந்தடைந்தனர்.

துாத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பெண்கள் உட்பட 25 பேர், அமர்நாத் யாத்திரை சென்றனர்.அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு ஆபத்தில் இருந்து தப்பிய அவர்கள், தரிசனத்தை நிறைவு செய்து, நேற்று அதிகாலை சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில், அவர்கள் அளித்த பேட்டி:தமிழகத்தைச் சேர்ந்த, 25 பேர் ஜூலை 3ல், சென்னையில் இருந்து புறப்பட்டு, 4ம் தேதி அமர்நாத் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற போது வானிலை சீராக இருந்தது. அமர்நாத்திலிருந்து, 6 கி.மீ., முன்னதாக உள்ள பஞ்சதரணி என்ற பகுதியில் இரவு தங்கினோம். அடுத்த நாள் காலை அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்தோம். தரிசனம் முடித்து கீழே இறங்கிய போது, மழை பெய்யத் துவங்கியது. அதனால், அமர்நாத்தில் இருந்து கீழே இறங்க தடை விதிக்கப்பட்டது. நான்கு மணி நேரத்தில் மழை நின்றதால், கீழே இறங்க அனுமதித்தனர். மீண்டும், 6, 7ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், நாங்கள் தங்கியிருந்த பகுதி முழுதும் மண் சரிவு ஏற்பட்டது. அங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. 10 அடிக்கு ஒரு ராணுவ வீரர் நின்று, யாத்ரீகர்களை வரிசையில் அனுப்பினர். எந்த வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை; ராணுவத்தினர் மிகச் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தரிசனம் முடிந்து பாதுகாப்பாக தமிழகம் திரும்பி உள்ளோம். எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த ராணுவத்தினருக்கு நன்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar