மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
09
மார் 2026 01:03
சேத்தியாத்தோப்பு: மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வளையமாதேவி அம்மன்குப்பம் கிராமத்தில் வெள்ளையம்மன், பொம்மியம்மன் சமேத மதுரை வீரன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கலச ஸ்தாபனம், வாஸ்து பூஜை, மிருத்ஸங்கிரகணம், கலச பூஜை, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணியளவில் யாக சாலையிலிருந்து கும்ப கலசம் புறப்பாடாகி காலை, 9:00 மணியளவில் மதுரைவீரன், வெள்ளையம்மன், பொம்மியம்மனுக்கும், பரிவார தெய்வங்களான முன் உடையான் ஆகியவற்றிற்கும் புனித கங்கை நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. வளையமாதேவி, அம்மன்குப்பம், பெரிய நற்குணம், கத்தாழை உள்ளிட்ட சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வளையமாதேவி அம்மன்குப்பம் கிராமத்தினர் செய்திருந்தனர்.
|