வடமதுரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2026 04:03
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை நிறைவேற்றினர்.
கடந்த மார்ச் பிப்.21ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 1ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 3 முதல் 7 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவில் நேர்த்திக்கடனுக்காக பூக்குழியில் இறங்குதல் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நேற்று இரவு 12:00 மணிக்கு மேல் துவங்கி 3 மணி நேரம் நடந்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை பொங்கல் வைத்தும், அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.