பதிவு செய்த நாள்
09
மார்
2026
03:03
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக நடந்தது.
கேரள மாநிலத்தின் பிர சித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் கடந்த, பிப்., 28ம் தேதி கொடியேற்றத்து டன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 36 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரவி கிருஷ்ணன் என்ற யானை பெற்றது. வெற்றி தொடர்ந்து, 10 நாட்களில் நடந்த உற்சவத்தில், இந்த யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடை பெற்றது. பக்தர்கள் உற்சவ மூர்த்தியையும், மூலவரையும் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, 10 நாட்களும் பக்தர்க ளுக்கு கோவில் தேவஸ் தானம் சார்பில் அன்ன லட்சுமி மண்டபத்திலும், பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.உற்சவத்தின் நிறைவு நாளான இன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. காலையில், ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டைமே ளம் முழங்க, யானை மீது உற்சவமூர்த்தி எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம், சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீதி உலா வந்தார்.மாலையில், கோவில் வளாக சிறப்பு மண்டபத் தில் உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் நீராடும் ஆறாட்டு நிகழ்ச்சிக்காக, இந்திரசென் யானை மீது எழுந்தருளினார்.ஆறாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சிறப்பு பூஜைகளுடன் உற்சவ விழா நிறைவ டைந்தது.