பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
05:07
செஞ்சி: செஞ்சி பி.ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி பி.ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் 49 வது ஆண்டு ஆடி கிருத்திகை விழாவை வரும் 23ம் தேதி நடை பெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு யாகமும், கொடியேற்றமும் நடந்தது. இதில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, விழா குழு நிர்வாகிகள் சிவக்குமார், மதியழகன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 23ம் தேதி வரை காலை, மாலை சிறப்பு அபிஷேக ஆராதானை நடந்து வருகிறது. 23 ம் தேதி ஆடி கிருத்திகை அன்று காலை 8 மணிக்கு மகாமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், தொடர்ந்து 108 திரவியங்களால் சக்திவேல் அபிஷேகம், செடல் போடும் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அக்னி சட்டி ஊர்வலம், தீமித்தல், தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பணை கூட நெல், அரிசி, மணிலா, வியாபாரிகள் மற்றும் எடை பணி தொழிலாளர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.