காரைக்குடி: காரைக்குடி சுப்ரமணியபுரம் 2வது வீதியில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதியில் குரு பூர்ணிமா விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் நடந்த இவ்விழாவில், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வேதபாராயணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பஜனையும் மகா மங்கள ஆரத்தியும், நாராயண சேவாவும் நடந்தது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சாதுக்கள் கலந்து கொண்டனர். சாதுக்களுக்கு, வித்யாகிரி பள்ளி தாளாளர் சுவாமிநாதன், முதல்வர் ஹேமாமாலினி வஸ்திர மற்றும் சொர்ண சேவா வழங்கினர். நிகழ்ச்சியில் காரைக்குடி சேர்மன் முத்துத்துரை மற்றும் தொழிலதிபர் தேவன், கவுன்சிலர் கண்ணன் மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சத்ய சாய் சேவா நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.