மேலூர்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான திருவாதவூர் திருமறைநாதருக்கு ஆனி பவுர்ணமியை முன்னிட்டு மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலுார், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.