பதிவு செய்த நாள்
15
ஜூலை
2022
11:07
உடுமலை: உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்தசாய் கோவிலில், 9ம் ஆண்டு விழாவையொட்டி, 108 சங்காபிேஷகம் நேற்று நடந்தது.உடுமலை தில்லை நகர், சீரடி ஸ்ரீ ஆனந்தசாய் கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 9ம் ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றது.நேற்று காலை, 6:00 மணிக்கு, காக்கட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, சீரடி ஸ்ரீ ஆனந்த சாய்நாதருக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகம் நடந்தது. பின்னர், நடந்த சிறப்பு அபிேஷக, ஆராதனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மதிய ஆரத்தி, மாலை, சாய் பஜன் நடந்தது. இன்று, குரு பூர்ணிமாவையொட்டி, மாலை 4:30 மணிக்கு, கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.* அமராவதிநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில், குரு பூர்ணிமாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை அருகே, அமராவதிநகரில், ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் உள்ளது.கோவிலில், குரு பூர்ணிமாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ சதாசிவ லிங்கேஸ்வரர், வனதுர்க்கையம்மன், நந்தீஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.