போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா .கடந்த, 28ல் அம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 5ல் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், கம்பம் சுற்றி பூவோடு எடுத்து விளையாடுதல், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
12ல் அம்மன் திருவீதி உலா வருதலும், 13ல் அம்மன் கண் திறப்பு, பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு வழிபாடு ஆகியவை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க, திருத்தேர் பவனியை, தர்மகர்த்தா செங்கதிர் பிரகாஷ், ஊர்க்கவுண்டர் செந்தாமரைகண்ணன், ஊர் குட்டே கவுண்டர் ராமமூர்த்தி ஆகியோர் வடம்பிடிக்க நேற்று இரவு, 7:00 மணிக்கு துவங்கியது. அவர்களுடன் பக்தர்களும் வடம் பிடிக்க தேர் இடையர்பாளையம் மெயின் ரோட்டிற்கு அருகேயுள்ள ரவுண்டு ரோடு வழியாக மகாலட்சுமி கோவிலை கடந்து மீண்டும் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். நிறைவு நாளான இன்று முளைப்பாரி எடுத்தல் மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கின்றன.