மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவசண்டி யாகம் 23ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2022 02:07
மானாமதுரை: மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கில் உள்ள மஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவ சண்டீ யாகம் வருகிற 23ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மானாமதுரை வேதியரேந்தல் விலக்கில் உள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருடந்தோறும் ஒரு வார காலம் நவசண்டீ யாகம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான யாகம் வருகிற 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து 28ந்தேதி வரை நடைபெறும் இந்த யாக விழாவில் மகா சுதர்சன ஹோமம்,புத்திர காமேஷ்டி ஹோமம், வனதுர்கா ஹோமம்,தசமகா வித்யா ஹோமம்,பஞ்சமுக பிரித்தியங்கிரா ஹோமம், நவசண்டீ ஹோமம் உட்பட ஏராளமான ஹோமங்கள் தஞ்சை கணபதி சுப்ரமணியன் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற உள்ளன. ரோமத்திற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா வேத தர்ம சேத்ரா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.