உத்தரகோசமங்கை, ஜூலை 15- உத்தரகோசமங்கை அருகே எக்குடி கிராமத்தில் உள்ள தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்பசித்தர் சுவாமி கோயிலில் பவுர்ணமி பூஜை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முன்னதாக காலையில் ஹோம வேள்வி மலர் அர்ச்சனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர், எக்ககுடி கிராம பொதுமக்கள், ராமநாதபுரம் பவுர்ணமி கிரிவலக் குழுவினர் செய்திருந்தனர்.