பதிவு செய்த நாள்
16
ஜூலை
2022
05:07
அவிநாசி: கன்னிமார் கருப்பராயன் கோவிலில், பொங்கல் சாட்டு விழா நடத்தப்பட உள்ளது. அவிநாசி, புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வலையபாளையத்தில் அமைந்துள்ள கன்னிமார் கருப்பராயன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் பூச்சாட்டு விழா நடத்தப்படுகிறது. வரும், 18ல் பூச்சாட்டு விழா துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன், காப்புக்கட்டுதல், கோவில் சாட்டும், காலை, 9:00 மணிக்கு பவானி கூடுதுறைக்கு தீர்த்தக்குடம் எடுத்தல் நடைபெறுகிறது. வரும், 19ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு படைக்கலம் எடுத்தலும், விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்தல், 20ம் தேதி, காலை, 5:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் மற்றும் அலங்கார, அபிஷேக பூஜை நடைபெறுகிறது. 22ம் தேதி, பிற்பகல், 12:00 மணிக்கு மறுபூஜை, மஞ்சள் நீராடலுடன் பொங்கல் சாட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.