பிள்ளையார்பட்டியில் 1008 கலாசாபிஷேக பூஜை : யாகசாலையில் சதுர்லட்ச ஜெபம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 06:07
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக உயிர்களின் நன்மை வேண்டி நடைபெறும் 1008 கலசாபிஷேகத்திற்காக யாகசாலையில் 1008 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகளும், சதுர் லட்ச ஜெபங்களையும் சிவாச்சாரியர்கள் துவக்கினர்.
இந்த சிறப்புமிக்க கலசாபிஷேகத்திற்கான. பூஜை, ஹோமங்கள் ஜூலை 13ல் துவங்கியது. சிவாச்சார்யர்களால் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. 2ம் நாள் சாந்தி ஹோமம், திசா ஹோமமம் , பிரவேச பலி, ரஷோக்ன ஹோமம் நடந்தது. 3ம் நாளில் நவக்கிரக ஹோமம், அஸ்த்ர மந்திர ஜெபம், வாஸ்துசாந்தி நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த கலசங்கள் கோயிலை வலம் வந்து கொடிமரத்தினருகே வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மாலை 6:30 மணிக்கு ரக்ஷாபந்தன பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆலயத்திலிருந்து பிரதான கலசம் புறப்பாடாகி யாகசாலை வந்ததை அடுத்து யாகசாலையில் 1008 கலசங்களை சிவாச்சார்யர்கள் நிறுவினர். தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜைகளும், சதுர் லட்ச ஜெபமும் துவங்கின. பின்னர் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. நாளை காலை 8:30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும் துவங்குகிறது. நாளை 4, 5ம் கால யாகசாலை பூஜைகளும் ஏழாம் நாளான ஜூலை 19 ல் காலை 11.00 மணிக்கு நான்கு லட்ச ஜப ஹோமம் நிறைவாகி கற்பகப் பெருமானுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.