Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ... 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு 300 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் மீட்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் அண்டாவில் பாலை ஊற்றி வழிபட்டனர்
எழுத்தின் அளவு:
கோவில் கதவை மூடியதால் பக்தர்கள் அண்டாவில் பாலை ஊற்றி வழிபட்டனர்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
04:08

தேவகோட்டை: தேவகோட்டை அருணகிரிபட்டனம் முத்து மாரியம்மன் கோவில் ஆடி உற்சவம் நடந்து வருகிறது. சக்தி கரகம் தூக்குவதில் இரு சமூகத்தினரிடையே பிரச்சினை உள்ளது. கோர்ட் உத்தரவு,  சமரச பேச்சு நடத்தி பலனில்லை. இதனால் நான்கு நாளில் திருவிழாவை நிறுத்தி கோவில் வெளி கேட்டை அதிகாரிகள் பூட்டினர். பக்தர்கள் கேட்டிற்கு வெளியே நின்று அம்மனை வழிபடுகின்றனர்.

நிறைவு நாள் சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். நிறைவு நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்க தயாராக இருந்த நிலையில் பால்குடம் எடுக்க  அனுமதிக்கவில்லை. வழக்கமாக புறப்படும் கைலாசவிநாயகர் கோவிலில் போலீசார் நிறுத்தப்பட்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். விரதம் இருந்த பக்தர்கள் கோயிலுக்கு நேரிடையாக வந்து கேட்டில்  மாலைகளை போட்டு கேட் அருகே வைக்கப்பட்ட அண்டாவில் பாலை ஊற்றி அம்மனை வழிபட்டனர். பல பக்தர்கள் கோவில் முன் வழிபட்டதோடு, சிலர் நிலைமையை எண்ணி கண்ணீர் விட்டனர்.

இந்நிலையில் கோவில் கரகம் தூக்கி நான்கு நாட்கள் வழிபட்ட நிலையில் கரகம் கரைக்காமல் கோயிலுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. திருவிழா முடிந்து காப்பு களையும் நிகழ்வு நடக்க வேண்டும்.  கரகம் கரைத்தால் தான் நடத்த முடியும் என்பதால் இரு தரப்பிலும் பேச்சு நடத்தி முடிவு எட்டப்படாததால் வேறு வழியின்றி பூசாரியே கரகத்தை தூக்கி சென்று கரைத்தார். இதனைத் தொடர்ந்து காப்பு  களையப்பட்டது. பக்தர்கள் ஊற்றிய சுமார் 600 லிட்டர் பாலை மாலை பூஜையின் போது அபிஷேகம் செய்தனர் . அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வெளியே நின்று வழிபட்டு  செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar