சின்னாளபட்டி : பிள்ளையார்நத்தம் மகாமுத்து மாரியம்மன் கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.ஆத்துார் ஒன்றியம் பிள்ளையார் நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆக. 8ல் பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நேற்று முன்தினம் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது. இதற்காக கோயில் அருகே குண்டம் வளர்த்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.இதன் பின் விநாயகர் கோயிலில் இருந்து அக்னி சட்டி எடுத்து வந்த பக்தர்கள் குண்டம் அருகே சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். தலைமை பூசாரியை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கைக்குழந்தை , அக்னி சட்டி , 10 அடி நீள அலகு குத்திய நிலையில் பூக்குழி இறங்கினர்.