ராஜபாளையம்: ராஜபாளையம் இ.எஸ்.ஐ காலனி சந்தன முத்துமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் இருந்து பால்குடம், தீர்த்த குடம், 21அக்னி சட்டிகளுடன் உலா நடந்தது. 16 வகை அபிஷேகங்களுடன் இரவு 10:00 மணிக்கு வளர்த்தல் தொடங்கி அதிகாலை 3:00 மணி அளவில் முளைப்பாரி பூப்பெட்டி அம்மன் கிரகம் எடுத்து வீதி உலா நடந்தது. காலை 6 மணி பூ இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் கவுரு குத்தும் நிகழ்ச்சி மாலை முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடந்தது. ஏறாபாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.