ராமாபுரம், ராமாபுரம், ஸ்ரீ தேச முத்துமாரியம்மன் கோவில் 36 வது ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் 27 ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடந்தது. இதில், 8 ம் தேதி மாலை 6:00 மணிக்கு சக்தி கிரகமும், அக்னி சட்டியும் திரு வீதி உலா நடந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் மற்றும் மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு அம்மன் திரு வீதி உலா நடந்தது.