சிவகாசி: சிவகாசி செண்பக விநாயகர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கோமதி அம்மன் புறப்பட்டு அம்மன் தினைப்புனம் காணல், மாலை சந்திர சேகர் சுவாமி தபசுக்காட்சி நடந்தது. செண்பக விநாயகர் கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தில் ராஜராஜேஸ்வரி அம்மனின் தெப்ப தேரோட்ட உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.