சிக்கல்: சிக்கல் அருகே தொட்டியபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள வைரவ சாமி கோயிலில் மர்ம நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த அம்மன் சிலை, பிள்ளையார் வாகனம், பைரவர் வாகனம், சூலாயுதம், தண்ணீர் பைப் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து வல்லக்குளத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி முருகன் அளித்த புகாரின் பேரில் சிக்கல் எஸ்.ஐ.,சாரதா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.