Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கோவிலில் ... அர்ச்சகர் நியமன அரசு விதிகள் ஆகம கோவில்களுக்கு பொருந்தாது! அர்ச்சகர் நியமன அரசு விதிகள் ஆகம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயிலில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயிலில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
08:08

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயில் உள்ளது.இக்கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் பால்குட விழா சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் இக்கோயிலில் பால்குடம் எடுப்பதாக வேண்டி பால்குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. வருடம் தோறும் நடைபெறும் இந்த கோயிலில் பால் குட விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்ட ஒன்பதாம் நாளான நேற்று பக்தர்கள் குமிளங்காடு கிராமத்தில் உள்ள கோட்டை ஐயா கோயிலிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனர். பக்தர்கள் அலகு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் தேவேந்திரஅடிகளார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar