Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் சக்தி ... திருச்செந்துார் ஆவணித் திருவிழா சுவாமி வெள்ளித் தேரில் வீதியுலா திருச்செந்துார் ஆவணித் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர் நியமன அரசு விதிகள் ஆகம கோவில்களுக்கு பொருந்தாது!
எழுத்தின் அளவு:
அர்ச்சகர் நியமன அரசு விதிகள் ஆகம கோவில்களுக்கு பொருந்தாது!

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
08:08

சென்னை : அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம், அறங்காவலர் அல்லது தக்காருக்கு மட்டுமே உள்ளது; ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களுக்கு, அர்ச்சகர் நியமன விதிகள் பொருந்தாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை கோவில் ஊழியர்கள் பணி விதிகளை, 2020ல் தமிழக அரசு ஏற்படுத்தியது. அதில், கோவில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.குறிப்பிட்ட சில விதிகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் முத்துகுமார், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.ஆகம விதிகளை, சடங்குகளை புறக்கணித்து விதிகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இதை பின்பற்றி, ஆகமப்படியான கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க முடியாது எனவும், மனுக்களில் கூறப்பட்டது.

இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், வழக்கறிஞர் பி.வள்ளியப்பன்; மற்றவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் ஆர்.பார்த்தசாரதி, என்.ஆர்.வெங்கடேஷ், பி.ஜெகநாத் ஆகியோரும்; அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோரும் ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2020ல் ஏற்படுத்திய விதிகளில், அறங்காவலர் மட்டுமின்றி தக்காரும், நியமன அதிகாரியாக வரையறுக்கப் பட்டுள்ளது. அறநிலையத் துறை சட்டப்படி, அறங்காவலர்கள் இல்லாதபோது, தக்கார் நியமிக்கப்படுகின்றனர்.அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ள, அறங்காவலர்களுக்கு தான் உரிமை உள்ளது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அறங்காவலர்கள் இல்லாதபோது, கோவில் செயல்பாடுகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.

எனவே, அவர்களின் அதிகாரங்களைச் செயல்படுத்த, தக்கார் நியமிக்கப்படுகிறார். அதனால், நியமன அதிகாரியாக விதிகளில் குறிப்பிடப்பட்டவர்களை, சட்டத்துக்கு எதிரானதாக கூற முடியாது.அதேநேரம், காலவரையின்றி தக்கார் நீடிக்கக் கூடாது. விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான், கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் வசம் இருக்கும்.அர்ச்சகர் நியமனங்களுக்கு தகுதி, வயது, 7 மற்றும் 9 வது விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு சான்றிதழ் வகுப்பு அர்ச்சகர் பணிக்கு தகுதியாகவும்; பல ஆண்டுகள் பூஜை செய்வதில் அனுபவம் இருந்தாலும், உரிய தகுதி இல்லை என்றால், அவர்களை நியமிக்க முடியாது எனவும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.இந்த விதிகளை சட்டவிரோதமானது எனக் கூற முடியாது. ஏனென்றால், இந்த விதிகள் அர்ச்சகர்களுக்கு மட்டுமின்றி, இதர பணியிடங்களுக்கும் பொருந்தும்.எனவே, இந்த இரண்டு விதிகளையும் ரத்து செய்தால், அர்ச்சகர் தவிர்த்து, மற்ற பணிகளுக்கான நியமனங்களில், வழிகாட்டுதல்கள் இல்லாமல் போய் விடும்.அதேநேரம், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு, இந்த விதிகள் பொருந்தாது.

ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை பொறுத்தவரை, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் சேஷம்மாள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும்.எனவே, ஆகம விதிகளின்படியான கோவில்களுக்கு, ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும். அறங்காவலர்கள் அல்லது தக்கார் தான் அர்ச்சகரை நியமிக்க முடியும்; அறநிலையத் துறை அல்ல. ஆகமப்படி அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றால், தனிநபர் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களை அடையாளம் காண வேண்டியதுள்ளது.

எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் ஐவர் குழுவை நியமிக்க, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. குழுவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி நிர்வாக குழு தலைவர் என்.கோபாலசாமி இடம்பெற வேண்டும்.தலைவரின் ஆலோசனையுடன், ஒரு மாதத்துக்குள், இரு உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும். அலுவல்சாரா உறுப்பினராக அறநிலையத் துறை கமிஷனர் இருக்க வேண்டும்.இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற கோவில்களுக்கு அல்ல.ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா; எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதை, ஐவர் குழு அடையாளம் காணும். அந்த ஆகமப்படி, அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்; விதி 7 மற்றும் 9ன்படி அல்ல. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar