கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2022 04:08
கம்பம்: கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் பங்கேற்றனர்,
கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் 3 நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாளாக நேற்று முன்தினம் வேணுகோபாலனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, விளையாட்டு, ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவ சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். பின்னர் வேலப்பர் கோயில் முன்பாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த போட்டியில் திரளாக இளைஞர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் சுற்றி நின்று கைதட்டி உற்சாகப்படுத்திகர், அதிகாலை வரை போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.