பதிவு செய்த நாள்
24
ஆக
2022
08:08
உடன்குடி: துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா, வரும் செப்., 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி அக்., 5ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு மகிஷாசூர சம்ஹார விழா நடக்கிறது.
இந்த தசரா திருவிழாவிற்கு, வேடம் அணியும் பக்தர்கம் 90 நாட்கள், 60 நாட்கள், 48 நாட்கள் மற்றும் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். மாலை அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டணம் கோலில், புனித நீராடி சிவப்பு ஆடை அணிந்து துளசி மாலையை கோயிலுக்கு கொண்டு வந்து, கோயில் அர்ச்சகர் கையால் அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளனர். இந்த தசரா திருவிழாவில் காளி, முருகன், விநாயகர், அனுமன், போலீஸ், பெண், நர்ஸ், குறவன் குறத்தி, முனிவர் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து , கோயில் கொடியேற்றம் நடைபெற்ற பின்பு திருக்காப்பு அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் சேர்ந்து காணிக்கை பிரித்து கோயிலில் லுத்துவார்கள். தற்போது மாலை அணிந்த பக்தர்கள், அவர்களது ஊரில் தசரா பிறை அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இந்தாண்டு லட்சக்கணக்கான தசரா திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.