இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் சிலை விற்பனை மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2022 08:08
அவிநாசி: இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் களை கட்டிய விநாயகர் சிலை விற்பனை கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட காத்திருக்கும் மக்கள்.
அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் செய்து தரும் தொழிலை செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளும் கொரோனா காலகட்டத்தினால் குறைந்த அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை ஆனது மேலும் தமிழக அரசின் சுற்றுப்புற சூழல் துறை பிளாஸ்ட் ஆப் பரிஸினால் செய்யப்பட்ட சிலைகளுக்கு தடைவிதித்து, களிமண், மரத்தூள் உள்ளிட்டவைகளில் செய்த சிலைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது. இதன் காரணமாகவும் பெருமளவில் விற்பனை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, இம்மாதம் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சிலைகள் தயாரிப்பு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆனந்தன் கூறுகையில், கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சிலைகள் தயாரிப்பு தொழிலை செய்து வருகின்றேன் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானோம். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி சிலைகள் தயாரிப்பு பணியில் தற்போது கோன் மாவு,கல் மாவு, பசை மாவு என மூன்றையும் ஒன்றாக கலந்து எளிதில் தண்ணீரில் கரையும் தன்மையாக சிலைகள் செய்யப்பட்டுள்ளது மேலும் கெமிக்கல் அதிகம் இல்லாத நீர் தன்மை: கொண்ட பெயிண்ட் உபயோகப்படுத்தப்பட்டு சிலைகளுக்கு வண்ணம் திட்டப்பட்டுள்ளது. ஒரு அடி முதல் சுமார் 12 அடி வரை சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது பலவிதமான தோற்றங்களில், பல்வேறு பரிமாணங்களில் விநாயகர் சிவல காண்போரை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சார்த்தோர் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வாங்கி செல்கின்றனர் என தெரிவித்தார்.