Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கூடல்மலை நவநீதப்பெருமாள் ... உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சுவாமி வீதி உலா உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் சிலை விற்பனை மும்முரம்
எழுத்தின் அளவு:
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் சிலை விற்பனை மும்முரம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
08:08

அவிநாசி: இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் களை கட்டிய விநாயகர் சிலை விற்பனை கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்குப் பிறகு வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட காத்திருக்கும் மக்கள்.

அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் செய்து தரும் தொழிலை செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளும் கொரோனா காலகட்டத்தினால் குறைந்த அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை ஆனது மேலும் தமிழக அரசின் சுற்றுப்புற சூழல் துறை பிளாஸ்ட் ஆப் பரிஸினால் செய்யப்பட்ட சிலைகளுக்கு தடைவிதித்து, களிமண், மரத்தூள் உள்ளிட்டவைகளில் செய்த சிலைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது. இதன் காரணமாகவும் பெருமளவில் விற்பனை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, இம்மாதம் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சிலைகள் தயாரிப்பு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆனந்தன் கூறுகையில், கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சிலைகள் தயாரிப்பு தொழிலை செய்து வருகின்றேன் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானோம். இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி சிலைகள் தயாரிப்பு பணியில் தற்போது கோன் மாவு,கல் மாவு, பசை மாவு என மூன்றையும் ஒன்றாக கலந்து எளிதில் தண்ணீரில் கரையும் தன்மையாக சிலைகள் செய்யப்பட்டுள்ளது மேலும் கெமிக்கல் அதிகம் இல்லாத நீர் தன்மை: கொண்ட பெயிண்ட் உபயோகப்படுத்தப்பட்டு சிலைகளுக்கு வண்ணம் திட்டப்பட்டுள்ளது. ஒரு அடி முதல் சுமார் 12 அடி வரை சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளது பலவிதமான தோற்றங்களில், பல்வேறு பரிமாணங்களில் விநாயகர் சிவல காண்போரை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சார்த்தோர் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வாங்கி செல்கின்றனர் என தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar