சிங்கம்புணரி கோயில்களில் வேலூர் இப்ராகிம் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2022 04:08
சிங்கம்புணரி: சிங்கம்புணரி கோயில்களில் பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் சுவாமி தரிசனம் செய்தார்.
சிங்கம்புணரியில் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வேலூர் இப்ராகிம் நேற்று பங்கேற்றார் . காலை 11:00 மணிக்கு சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சித்தர் முத்துநாதர் கோயிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கும் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. மாலை 6:50க்கு பிரான்மலை தர்கா கந்தூரி நடக்கும் இடத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.