பதிவு செய்த நாள்
24
ஆக
2022
04:08
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஏகாதசி வைபவம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை, விஸ்வக்சேனர் பூஜை, புண்ணியா வசனம், கலச ஆவாகனம் ஆகிய பூஜைகள் நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. நீல நிற பட்டு உடுத்தி, வெண்பட்டு குடை சூழ, வெள்ளி சிம்மாசனத்தில், அரங்கநாத பெருமாள் கோவிலில் வலம் வந்தார். உச்ச கால பூஜை சற்று முறை சேவிக்கப்பட்ட பின்பு, மங்கல தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், கோவில் அலுவலர்கள் என, ஏராளமான பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.