திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. அதையொட்டி மூலவர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு, பால், தயிர், இளநீர், பழங்கள் உள்பட 11 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் உற்சவர்கள் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.