பதிவு செய்த நாள்
31
ஆக
2022
10:08
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே வி.குரும்பபட்டி நாகம்மாள், விநாயகர்,முருகன், பட்டாணி கருப்பணசாமி கோவில்களில் கும்பாபிஷேக விழாவையொட்டி முளைப்பாரி மற்றும் தீர்த்த ஊர்வலம் நடந்தது.
விழாவையொட்டி நேற்று விநாயகர் வழிபாடு மகா சங்கல்பம், புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, புனித மண் எடுத்தல், பாலியை பூஜை, ரக்க்ஷா பந்தனன், காப்புக் கட்டுதல், கும்பல் அலங்காரம், சக்தி கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தது. இன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கும். நாளை நான்காம் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய துணைத் தலைவர் டாக்டர் காளியப்பன்,ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.