பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
சாணார்பட்டி, சாணார்பட்டி அங்காளஈஸ்வரி அம்மன், மதுரை வீரன் சுவாமி கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, மகா சங்கல்யம், வேதபாராயணம், மூலிகையாகும், மந்திரஸ்தானம், மருந்து சாற்றுதல் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று விநாயகர் வழிபாடு, நாடி சந்தானம், சாமிக்கு உயிர் ஊட்டுதல், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் யாகசாலை மற்றும் கோவிலை சுற்றி வந்து கோவிலில் உச்சியில் உள்ள கும்பத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களின் புனித நீரூற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். அன்னதானம் நடந்தது.