பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
சூலூர்: குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில்,.22 வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. மைசூர், வெள்ளியங்கிரி, அவிநாசி, பவானி, செஞ்சேரி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவில்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. காலை, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா பூஜை துவங்கியது. பல்வேறு வகையான மூலிகைகளால் ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி முடிந்து புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன், மாகாளியம்மன் மற்றும் மகா முனிகளுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. அலங்காரம் முடிந்து மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. கோவை, சோமனூர், திருப்பூர்,சிறுமுகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். ஆண்டு விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.