ஒட்டன்சத்திரம்: காவேரியம்மாபட்டி விநாயகர், காவேரியம்மன், கருப்பண்ணசாமி, முருகன், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, துர்க்கை அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கோயில் கலசங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர்.