பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
போடி: போடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கொட்டகுடி ஆற்றில் கரைக்கப்பட்டது.
போடி நகர், பி. தர்மத்துப்பட்டி, ரங்கநாதபுரம், விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பிரதிஷ்டை செய்த 80க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம், சதுர்த்தி விழா போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கீழச்சொக்கநாதர் கோயில் அறங்காவலர் பாண்டி சுந்தரபாண்டியன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர் தண்டபாணி, போடி நகர தலைவர் சந்திரசேகர், நகர பொதுச் செயலாளர் மணிகண்டன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நகர பேச்சாளர் கோட்டைச்சாமி, ஆர்.எஸ்.எஸ்., போடி நகர தலைவர் பாலசுப்பிரமணி, இந்து முன்னணி போடி நகர் ஒன்றிய அமைப்பு செயலாளர் கணேஷ்குமார், நகரத்தலைவர் போதுமணி, பொதுச் செயலாளர் வினோத், மாவட்ட பேச்சாளர் அங்குவேல், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் பூங்கொடி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாகுழு ஒருங்கிணைப்பாளர்கள், இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விநாயகர் சிலைகள் போடி பஸ் ஸ்டாண்டில் துவங்கி காமராஜ் பஜார், கட்டபொம்மன் சிலை, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று வேட்டை கருப்பசாமி கோயில் அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் கரைக்கப்பட்டன. போடி டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 220 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.