Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை தொட்டப்பநாயக்கனூரில் உழவாரப்பணி தொட்டப்பநாயக்கனூரில் உழவாரப்பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி பல்லக்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலால் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி பல்லக்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலால் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

19 செப்
2022
11:09

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், 2020 நவம்பர் மாதம், ஹிந்து  சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கோவிலில் இருந்த வெள்ளி பல்லக்கை ஆய்வு செய்தபோது, அவை 200 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லக்கு என்பது தெரிய வந்தது.  மேலும் 1,954ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்போது, வெள்ளிப்பல்லக்கில், 11 கிலோ வெள்ளி தகடு, இருந்ததாக அப்போதைய ஆய்வில் உள்ளதாகவும், இப்போதையை ஆய்வின்போது 8.800 கிலோ  மட்டுமே இருப்பதாக கோவில் தரப்பில் சொல்லப்பட்டது.

மாயமான மூன்று கிலோ வெள்ளி தகடு குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின், அந்த நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், தினேஷ்  என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், வெள்ளி பல்லக்கில் திருடுபோன வெள்ளி குறித்து செயலர், அலுவலர் மற்றும் நகை சரிபார்ப்பு அலுவலர் போலீசில் புகார் அளித்தார்களா? என கேள்வி  எழுப்பிஇருந்தார். அதற்கு, கோவில் தரப்பில், வெள்ளி பல்லக்கு அளவுகள் எடுக்கப்பட்டு, வெள்ளி தகடுகள் தேய்மானம் ஏற்பட்டதாகவும், இதனால் இழப்பு ஏதும் இல்லை என நகை சரிபார்ப்பு  அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்; தகடுகள் ஏதும் திருடு போகவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.கோவில் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதில், கேள்வி எழுப்பியவருக்கும், பக்தர்கள் பலருக்கும்  அதிர்ச்சியாக உள்ளது. வெள்ளி பல்லக்கில், பல இடங்களில் வெள்ளி தகடை பெயர்த்து எடுத்தது போல் பல்வேறு புகைப்படங்கள் உள்ளன.ஆனால், எந்த தகடும் திருடு போகவில்லை என, கோவில்  தரப்பில் பதில் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று வீர அழகர் வெள்ளை குதிரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar