Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் அஸ்தர ... பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு பூஜை பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாளய அமாவாசை : சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்
எழுத்தின் அளவு:
மகாளய அமாவாசை : சுருளி அருவியில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

பதிவு செய்த நாள்

25 செப்
2022
04:09

கம்பம்: சுருளி அருவியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூட்டம் குவிந்தது. 53 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க வனத்துறையும் அனுமதி வழங்கியது.

மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஆடி, தை மற்றும் மகளாக அமாவாசை நாட்களில் கொடுப்பது சிறப்பானது. அவரவர் மறைந்த திதிகளை வைத்து ஆண்டுதோறும் தரப்பணம் செய்தாலும் இந்த மூன்று அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாகும். அதிலும் மகாளய அமாவாசை மிக சிறப்பானதாகும். இன்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கார்களிலும், வேன்களிலும் சுருளி அருவியில் குவியத் துவங்கினார்கள். 53 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதித்திருந்த வனத்துறையும் நேற்று காலை மகாளய அமாவாசையை முன்னிட்டும், அருவியில் தண்ணீர் குறைந்ததாலும் குளிக்க அனுமதி வழங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அருவியில் குளித்து, ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் இங்குள்ள புராதானமான பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயில் சார்பில் காலை முதல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார் முருகன் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்தை நடத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar