பதிவு செய்த நாள்
27
செப்
2022
05:09
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழா, இன்று கொடியேற்றத்துடன் தூங்குகிறது.
சிறுமுகை ஆலங்கொம்பு அருகே, தென் திருமலையில் தென் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா, இன்று மாலை, 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அக்டோபர், 1ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலையை மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கின்றனர். அதைத்தொடர்ந்து அன்று இரவு, 7:30 மணிக்கு கருட சேவையும், இரண்டாம் தேதி காலை அனுமந்த வாகனத்தில் திருவீதி உலாவும், மாலையில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருகிறார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கே.ஜி., நிறுவனத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.