பதிவு செய்த நாள்
27
செப்
2022
05:09
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு, 60 லட்சம் மதிப்பில், நவீன குளியல் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை, பகல் நேரங்களில், கோவிலிலும், மற்ற நேரங்களில், ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள யானை கூடத்திலும் இருக்கின்றது. இந்த கோவில் யானை, குளிக்க, பட்டீஸ்வரர் கோவிலில், தனி தொண்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், யானையை குளிப்பாட்டி வருகின்றனர். இந்நிலையில், பேரூர் கோவில் யானைக்கு, அதிநவீன வசதி கொண்ட சவர் குளியல், நடைபாதை வசதி அமைக்க அறநிலையத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா கூறுகையில்," பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான, 5.25 ஏக்கர் இடத்தில், கோவில் யானைக்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், அதிநவீன சவர் குளியல், தண்ணீர் தொட்டி, யானை நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபின், பணிகள் மேற்கொள்ளப்படும்,"என்றார்.