Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் ... உலக நன்மை வேண்டி பிரித்தியங்கரா தேவி யாகம் உலக நன்மை வேண்டி பிரித்தியங்கரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதுாரில் வீரராகவருக்கு உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதுாரில் வீரராகவருக்கு உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

12 அக்
2022
08:10

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் அவதரித்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள குளக்கரையில் வேதாந்த தேசிகன் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகனின் அவதார தின விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும்.


இந்த விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருள்வது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு வேதாந்த தேசிகரின் 754வது அவதார தின விழாவுக்காக திருவள்ளூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, வீரராகவ பெருமாள் புறப்பட்டார். நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் எல்லையை வந்தடைந்தார். அங்கு வேதாந்த தேசிகர் ஊர் எல்லையில் பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு வீரராகவ பெருமாளை அழைத்தார். அதன் பின், ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு கண்டருளி, காலை 6:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் அஹோபில மடத்திற்கு எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் பொது தரிசனம் நடந்தது. காலை 9:30 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் மாட வீதிகளில் திருவாபரண திருமேனியுடன் வீரராகவ பெருமாள் வேதாந்த தேசிகன் கோவிலை வந்தடைந்தார். அங்கு மதியம், 1:00 மணிக்கு, வீரராகவ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:30 மணிக்கு வேத திவ்யபிரபந்தம், பஜனை கோஷ்டி நடைபெற்றன. நள்ளிரவு 12:00 மணிக்கு திருவீதி புறப்பாடும், திருவாய்மொழி சேவையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar