Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி சீனிவாசப் பெருமாள் கோவிலில் ... பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம் பழநி திருஆவினன்குடி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் புனிதநீருடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் புனிதநீருடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

05 டிச
2025
10:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, புனிதநீர் நிரப்பிய குடங்களை, சிவாச்சாரியார்கள், கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, 29 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டு குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் குடங்களுக்கு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். புனிதநீர் குடங்கள் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமாரதுரை, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் அலமேலு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெகன்னாதன், வரதன், வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பணி, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தி.மு.க., – எம்.எல்.ஏ., க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் ஆகியோர் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar