Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி சீனிவாசப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் புனிதநீருடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் புனிதநீருடன் சிவாச்சாரியார்கள் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

05 டிச
2025
10:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, புனிதநீர் நிரப்பிய குடங்களை, சிவாச்சாரியார்கள், கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிச., 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, 29 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த மாதம் 3ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டு குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் குடங்களுக்கு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு எடுத்து வந்தனர். புனிதநீர் குடங்கள் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கோபூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமாரதுரை, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் அலமேலு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெகன்னாதன், வரதன், வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடந்து வரும் திருப்பணி, கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு, பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தி.மு.க., – எம்.எல்.ஏ., க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் ஆகியோர் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar