Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமசாமி கோவிலில் இரண்டு மணி நேரம் ... அன்னூர் பெருமாள் கோவில்களில் புரட்டாசி உற்சவம் அன்னூர் பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா

பதிவு செய்த நாள்

15 அக்
2022
02:10

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிலுக்கு வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.

கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலம், அரங்கநாதர் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதம் இருந்து, கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். கோவில் முன்புள்ள தாசர்களுக்கு பக்தர்கள் படையலிட்டு, பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். இன்று புரட்டாசி மாத சனிக்கிழமை விழா நடந்தது. அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், கோவிலில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்பு, 4:45 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

புரட்டாசி மாத கடைசி வாரம் என்பதால், ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். முன்னதாக கோவில் முன்பு அமர்ந்துள்ள, நூற்றுக்கணக்கான தாசர்களுக்கு பக்தர்கள் காய்கறிகள், அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வழிபட்டனர். பின்பு தாசர்கள் கொடுத்த சிறிதளவு அரிசி, பருப்பு, காய்கறிகளை பெற்றுச் சென்று, அதை பொங்கலில் போட்டு விரதம் முடித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar