Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறந்த குழந்தை பேசுமா: இப்படியும் ... பஞ்ச பாண்டவர் மலையை இனியாவது காக்குமா தொல்லியல் துறை? பஞ்ச பாண்டவர் மலையை இனியாவது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை இன்று திறப்பு தினமும் ஓணம் விருந்து!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
10:08

சபரிமலை: ஓணம் பண்டிகை உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு, பக்தர்களுக்கு தினமும், ஓணம் விருந்து வழங்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, ஆண்டுதோறும் ஓணம் பண்டிகைக்காக திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு ஓணம் விருந்து (ஓண சத்யா), வழங்கப்படுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டு ஓணம் பண்டிக்கைக்காக, கோவில் நடையை, இன்று மாலை, 5:30 மணிக்கு தலைமை அர்ச்சகர் (தந்திரி) கண்டரரு ராஜீவரு முன்னிலையில், முதன்மை அர்ச்சகர் (மேல்சாந்தி) பாலமுரளி நம்பூதிரி நடையை திறப்பார். பின், ஓணம் விருந்திற்கான, காய்கறிகளை, முதன்மை அர்ச்சகர் பாலமுரளி நம்பூதிரி, சுவாமிக்கு படைத்து, அவற்றை நறுக்கி கொடுத்து, விருந்து தயாரிப்பிற்கான ஏற்பாடுகளை துவக்கி வைப்பார். நாளை அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். அன்று உத்திராட நட்சத்திரத்தில், ஓணம் விருந்தின் முதல் நாளில், முதன்மை அர்ச்சகர் சார்பில் பக்தர்களுக்கு விருந்தளிக்கப்படும். நாளை (28ம் தேதி) உச்சிக்கால பூஜைக்குப் பின், அய்யப்பன் படத்திற்கு முன்னால், தலைமை மற்றும் முதன்மை அர்ச்சகர்கள் சுவாமிக்கு, விருந்து பதார்த்தங்களை படைப்பர். தொடர்ந்து, பால் பாயசம், அடை பிரதமன் ஆகிய இரு பாயசங்களுடன், 20 வகை பதார்த்தங்களை கொண்ட ஓணம் விருந்து பக்தர்களுக்கு பரிமாறப்படும்.நாளை மறுநாள் (29ம் தேதி) திருவோணத்தன்று, டாக்டர் மணிகண்ட தாசன் சார்பிலும், தொடர்ந்து 30 மற்றும் 31ம் தேதிகளிலும், ஓணம் விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும். பூஜைகள், ஓணம் விருந்து முடிந்து, 31ம் தேதி இரவு, 10 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar