Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி ... ஆறாம் படை வீடானா சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் ஆறாம் படை வீடானா சோலைமலை முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

31 அக்
2022
07:10

தூத்துக்குடி,திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷங்களுக்கு மத்தியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்., 25 யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, அபிஷேகம் நடந்தது. ஆறாம் நாளான நேற்று முன் தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடந்தது. ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடந்தது. பின் ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேளவாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் வந்தடைந்தார். தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. நேற்றுமாலை 4:00 மணிக்கு ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார். முதலில் கஜமுகனாக வந்த சூரபத்மனை மாலை 4:35 மணிக்கு வதம் செய்தார். தொடந்து சிங்கமுகனாகவும், பின் சுயரூபத்துடன் வந்த சூரபத்மனை வதம் செய்தார்.

கோயில் முன்பும் கடற்கரையிலும், நாழிக்கிணறு பகுதியிலும் லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பினர். பின் கடலில் நீராடி விரதம் நிறைவு செய்தனர். தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் ஜெயந்தி நாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று( அக்., 31) இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இரண்டாண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டது. டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், எஸ்.பி.க்கள் சரவணன், பாலாஜி சரவணன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன், ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி, அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை கமிஷனர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா துவங்கியது. கேரளா திருச்சூர் வடக்கு நாதர் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், தமிழகத்தில் நேற்று தொடங்கியது. வரும், 28ம் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18 அல்லது 19 தேதியில் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ... மேலும்
 
temple news
திருப்பதி;  மே 6 முதல் 8 வரை திருமலையில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாசன் பரிணயோத்சவம் பிரமாண்டமாக ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar