Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விக்னேஷ்வர கோவிலில் திருவிளக்கு ... சந்திர கிரகணம் : இருக்கன்குடி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழியும் நிலையில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயில். தொல்லியல் துறை பாதுகாக்குமா ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2022
04:11

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோவில் வரலாற்றுச் சின்னம் அழிவின் விளிம்பில் உள்ளது. தொல்லியல் துறை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அருப்புக்கோட்டை பாலவனத்தம் அருகே சென்நெல்குடி கிராமம் உள்ளது. இங்கு 800 ஆண்டுகளுக்கு முந்தைய, பாண்டியர் கால சிவன் கோயில், கல்வெட்டுகள் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் பாழடைந்து கிடக்கிறது. சிதிலமடைந்த கோயிலில் மூலவர் இல்லை. அங்கு பூஜைகளும் நடப்பதில்லை. கருவறை பகுதியில் நாயக்கர் கால அய்யனார் சிற்பம் உள்ளது. கோயில் குறித்து, பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், " இந்த கோயில் இடைக்கால பாண்டியர் காலத்தில் உருவானது. மாறவர்ம பராக்கிரம பாண்டியனின் 7 ம் ஆட்சியாண்டு காலத்திய கல்வெட்டு இங்குள்ளது. இவர் ஆயிரத்து 130 முதல் ஆட்சி செய்து உள்ளார். இந்தக் கோயில் ஆயிரத்து137 இல் கட்டப்பட்டிருக்க வேண்டும். சோனாட்டு முல்லை சூடினான் ஸ்ரீ ராஜமாணிக்க நல்லூர் தான் செந்நெல்குடியின் பழைய பெயர்." என்றனர். கோயிலுக்கு அருகில் பழமையான கல் செக்கு உள்ளது. கோவில் சுவர்களில் எழுத்துக்கள் உள்ளன. பண்டைய வரலாறு கூறும் இது போன்ற கோயில்களை புனரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வரவும், பழமையான வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar